Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/இறைவனை மட்டும் நம்புங்கள்

இறைவனை மட்டும் நம்புங்கள்

இறைவனை மட்டும் நம்புங்கள்

இறைவனை மட்டும் நம்புங்கள்

ADDED : டிச 04, 2007 07:14 PM


Google News
Latest Tamil News
பக்தனுடைய பிரேமைக்கு வசப்பட்டு பகவான் அவனிடம் அகப்பட்டுக் கொள்கிறார். சாதனைகள் பழகப் பழக இறைவனின் அருள் ஏற்படும்போது அவரது காட்சி கிட்டுகிறது. பக்தன் பகவானைத் தன் இதயத்தில் தாங்கிக் கொண்டு உலகில் வாழ்கிறான்.

இறைவனைக் காணவேண்டும் என்று மனம் ஏங்குகிறது. உயிர் துடிக்கிறது, இந்த நிலையில்தான் இறைவனின் தரிசனம் கிட்டும். இறைவனை அடைய வேண்டுமானால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். இறைவன் தூய பக்தர்களிடம் அதிக அளவில் பிரகாசிக்கிறான்.

அவதார புருஷரை நினைப்பது இறைவனை நினைப்பதற்குச் சமம். எவ்வளவு இடையூறுகள், ஆபத்துக்கள் வந்தாலும் ஞானி மனம் கலங்க மாட்டான்.

இறைவனை அடைந்தபிறகு ஒருவனுக்கு உலகப் பொருள்களில் மயக்கம் தோன்றாது. இறைவனே உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களாகவும் ஆகியிருக்கிறான்.

எவன் இறைவனை அடைய ஏங்கி நிற்கிறானோ, அவன்மீது இறைவனின் கருணை விழுகிறது. இறைவன் நாமத்தில் பக்தனுக்குத் தீவிர நம்பிக்கை இருக்க வேண்டும். இறைவனே உலகம் என்ற இந்த நம்பிக்கை ஏற்பட்டால் எல்லாச் சிக்கல்களும் ஒழிந்து தீர்வு காண முடியும்.

'ஆண்டவனே கர்த்தா, நான் கர்த்தா அல்ல' என்ற நம்பிக்கை எவனிடம் இருக்கிறதோ அவன் ஜீவன் முக்தன். மனதில் தீய வாசனைகள் இருக்கும் வரையில் தூய பக்தி உண்டாவதில்லை.

இறைவனை ஆராய்ச்சியால் அறிந்துகொள்ள முடியாது, எல்லாம் நம்பிக்கையைச் சார்ந்தது.

தனித்த ஓர் இடத்தில் மங்கைப் பருவமுள்ள ஒரு பெண்ணைக்கண்டால், அவளைத் தன் மனதில் தாய் என்று வணங்கிப் போகிறவனே உண்மைத் துறவின் தன்மைகளை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us